தருமபுரி மாவட்டம் இலக்கியம் பட்டியில் நடைபெற்ற ஊரக பகுதிகளுக்கான மக்களுடன் முதல்வர் திட்டத்தின் கீழ் மனுக்களை பதிவு செய்யும் சிறப்பு முகாமினை மாவட்ட ஆட்சித் தலைவர் கி சாந்தி அவர்கள் நேரில் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார் பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்று கோரிக்கைகளை குறித்து விவரம் கேட்டறிந்தார் உடன் தர்மபுரி வட்டாட்சியர் ஜெய செல்வன் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் கலைவாணி சத்யா ஊராட்சி மன்ற தலைவர் சுதா ரமேஷ் துணைத் தலைவர் வித்யா வெங்கடேசன் மற்றும் அரசுத் துறை அலுவலர்கள் உள்ளாட்சி அமைப்பின் பிரதிநிதிகள் உள்ளனர்



