கிருஷ்ணகிரி, நவ. 29 –
கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த கோணனூர் கிராமத்தில் காவேரிப்பட்டிணம் சாலையில் அதிவேகமாக காவேரிப்பட்டினம் சென்ற சிவப்பு நிற கார் எதிரே வந்த 2 இரு சக்கர வாகனங்கள் மீது மோதியது. இதில் இரு சக்கர வாகனத்தில் வந்த அகரம் அடுத்த சுண்டகாபட்டி கிராமத்தை சேர்ந்த செல்வம் (37), மனைவி புவனேஸ்வரி (35) மற்றும் அவர்களது மகன் கோகுல் (12) மற்றும் மற்றொரு இரு சக்கர வாகனத்தில் வந்த சின்னகரடியூர் கிராமத்தை சேர்ந்த காளியப்பன் (52) ஆகிய நான்கு பேரும் கார் மோதியதில் தூக்கி வீசப்பட்டு படுகாயமடைந்தனர்.
எதிரே காரில் வந்த அடையாளம் தெரியாத நபர் ஓட்டி வந்த கார் திடீரென கட்டுப்பாட்டை இழந்து இரு சக்கர வாகனங்கள் மீது அடுத்தடுத்து மோதியது. இதனை அங்கிருந்தவர்கள் மீட்டு போச்சம்பள்ளி அரசு பொது மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். பின்பு அங்கிருந்து மேல் சிகிச்சையாக தர்மபுரி தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். இதில் 12 வயது பள்ளி சிறுவன் கோகுல் மருத்துவமனையில் திவீர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தற்பொழுது சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இச்சம்பவம் இப்பகுதியில் சோகத்தை ஏற்ப்படுத்தியுள்ளது.



