நாகர்கோவில் செப் 27
கன்னியாகுமரி மாவட்டத்தில் தூய்மையான கட்டமைப்பு உருவாக்கும் பொருட்டு பள்ளிகளில் மாணவ, மாணவியர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் இந்திய அஞ்சல் துறை கன்னியாகுமரி கோட்டம் சார்பில் தூய்மையே சேவை 2024 என்ற பெயரில் கவிமணி தேசிக விநாயகம் பிள்ளை அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கோட்டார் வளாகத்தில் கவிமணி அவர்களின் 70வது நினைவு நாளான 26/9/2024 அன்று 20 மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் சிறப்பு விருந்தினராக கோட்ட கண்காணிப்பாளர் க செந்தில்குமார் கலந்து கொண்டார்கள். பள்ளியின் தலைமை ஆசிரியர் நல்லாசிரியர் கமலா முன்னிலை வகித்தார்கள். விழாவில் ஆசிரியர் நாகராஜன், ஆசிரியர்கள் மற்றும் பள்ளி மாணவியர்கள் கலந்து கொண்டனர்.