தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி வட்டம் சித்திர பட்டி நடைபெற்ற மக்கள் தொடர்பு முகாமில் அரசுத்துறைகளின் சார்பில் 91 பயனாளிகளுக்கு 35,06,190 மதிப்புள்ள அரசின் பல்வேறு நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சியர் இளம் பகவத் வழங்கினார்.இந்நிகழ்ச்சியில் கோவில் பட்டி வருவாய் கோட்டாட்சியர் மகா லட்சுமி, குருவிகுளம் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் விஜயலக்ஷ்மி, சமூக பாதுகாப்பு திட்ட தனிதுணை ஆட்சியர் ஹபிபூர் ரஹ்மான், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர் விக்னேஷ்வரன், மாவட்ட வழங்கல் அலுவலர் உஷா, மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் பென்னட் ஆசிர்,இணை இயக்குநர் (வேளாண்மை) பெரிய சாமி, உதவி ஆணையர் (கலால்) கல்யாண்குமார், கோவில் பட்டி வட்டாட்சியர் சரவணப் பெருமாள், மாவட்ட ஊராட்சி உறுப்பினர் தேவி, சித்திர பட்டி ஊராட்சி மன்ற தலைவர் கேசவன், துணைத்தலைவர் மாரி சாமி, வட்டார வளர்ச்சி அலுவலர்கள், உள்ளாட்சிப் பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் பலரும் கலந்து கொண்டனர்



