தருமபுரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூடுதல் கூட்டரங்கில் மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் ஆட்சியர் சதீஷ் தலைமையில் நடைபெற்றது. இதில் கூட்டத்தில் பொதுமக்கள் சாலை வசதி, குடிநீர் வசதி, பேருந்து வசதி உள்ளிட்ட பல்வேறு அடிப்படைவசதிகள் வேண்டி மொத்தம் 808 மனுக்களை வழங்கினர் கள். பொதுமக்களிடமிருந்து பெறப்பட்ட மனுக்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கும்படி சம்பந்தப்பட்ட துறை அலுவலர்களுக்கு ஆட்சியர் உத்தரவிட்டார். கூட்டத்தில் தருமபுரி தாட்கோ அலுவலகத்தின் சார்பில் தமிழ்நாடு தூய்மை பணியாளர் நல வாரியத்தில் கீழ் தூய்மை பணியாளர்களின் வாரிசுதாரர்கள் 6 பயணிகளுக்கு ரூ. 17,000 மதிப்பில் கல்வி உதவி தொகை மற்றும் திருமண உதவித்தொகைகளை ஆட்சியர் வழங்கினார் .மேலும் தமிழ் வளர்ச்சித் துறையின் சார்பில் 2023 -ஆம் ஆண்டிற்கான தமிழ்ச்செம்மல் விருது பெற்ற விருதாளர் சென்றாய னுக்கு விருதுத் தொகை ரூ. 25,000க்கான காசோலையை ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில் மனு அளித்த அரூர் வேடகட்டமடுவு பகுதியை சேர்ந்த மாற்றுத்திறனாளி இசை அரசனின் கோரிக்கை மனுவின் மீது உடனடி நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு,ரூ. 27,600 மதிப்பில் நவீன வாசிக்கும் கருவி, ப்ரெய்லி கைக்கடிகாரம், ஊன்றுகோல் மற்றும் கண்ணாடியை ஆட்சியர் வழங்கினார். கூட்டத்தில்கூடுதல் ஆட்சியர் கேத்தரின் சரண்யா, டிஆர்ஓ கவிதா, மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர்செண்பகவள்ளி மற்றும் அரசு துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
மக்கள் குறைதீர்க்கும் நாள் கூட்டம்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics