நாகர்கோவில் அக் 9
குமரி மாவட்டம் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து அண்ணா பேருந்து நிலையம் வரை எம் எல் ஏ. தளவாய்சுந்தரம் தலைமையில் மனித சங்கிலி போராட்டம் நடைபெற்றது.
திமுக அரசு தமிழகத்தில் பொறுப்பேற்ற பின்பு பல்வேறு பொருட்களின் விலைவாசி உயர்ந்துள்ளது,குறிப்பாக வீட்டுவரி உயர்வு, சொத்துவரி உயர்வு, மின்கட்டன உயர்வு, அனைத்து அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வு மற்றும் இளைஞர்களின் எதிர்காலத்தை சீர்குலைக்கும் போதை பொருட்கள் புழக்கத்தை கட்டுபடுத்த தவறியதை உள்ளிட்டவற்றை கண்டித்து அதிமுக சார்பில் தமிழகமெங்கும் மனித சங்கிலி போராட்டம் அறிவிக்கப்பட்டது. அந்த வகையில் கன்னியாகுமரி மாவட்டத்தில் 21 இடங்களில் அதிமுக சார்பில் போராட்டங்கள் நடைபெற்றது இதில் நாகர்கோவில் வேப்பமூடு சந்திப்பில் இருந்து அண்ணா பேருந்து நிலையம் வரை எம் எல் ஏ. தளவாய்சுந்தரம் தலைமையில் மனித போராட்டம் நடைபெற்றது. இதில் அதிமுகவினர் 200க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர் மேலும் தமிழக அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர்.