போச்சம்பள்ளி அருகே பாலியல் தொல்லைக்கு ஆளாக்கப்பட்ட சிறுமைக்கு ஆதரவாக தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக கண்டன ஆர்ப்பாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகம் எதிரே தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் சார்பாக 200க்கும் மேற்பட்டோர், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு ஆதரவாக ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். பள்ளி செல்லும் சிறுமிக்கு பள்ளியின் ஆசிரியர்களே வன்கொடுமை செய்த சம்பவத்தை தடுக்க தவறிய முதலமைச்சரையும் திமுக அரசையும் கண்டித்து கோஷங்கள் எழுப்பி ஆர்ப்பாட்டம் செய்தனர். கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட தலைவர் சின்னராஜ் தலைமையில் நடைபெற்ற இவ்வார்பாட்டத்தில் சிறப்பு விருந்தினராக அவை தலைவர் இளங்கோவன் பங்கேற்று கண்டன உரை நிகழ்த்தினார். பர்கூர் தெற்கு ஒன்றிய செயலாளர் திருநாவுக்கரசு கிருஷ்ணகிரி மாவட்ட அவை தலைவர் முருகன் முன்னிலை வகித்தனர். நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் ஆர்வத்துடன் பங்கேற்று இருந்தனர். போச்சம்பள்ளி போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.