கோயமுத்தூர் மாவட்டம் சூலூர் பகுதியில் நாடார் சமுதாய மக்களுக்கு உறுப்பினர் அடையாள அட்டை வழங்கும் நிகழ்வு,
நாடார் மகாஜன சங்க புதிய நிர்வாகிகள் அறிமுகம் மற்றும் உறுப்பினர் அட்டை வழங்கும் விழா நடைபெற்றது. நெல்லை காசி கே.எட்வின் ஏற்பாட்டில் நடைபெற்ற இவ்விழாவில் வரவேற்புரை ஆற்றினார் பாலச்சந்தர் மிக்சர் கணேசன், முத்துலிங்கம், சந்துரு, இசக்கி குமார், ராபின்சன், அல்போன்ஸ், செல்வின், துரைராஜ், ஜான்சன், சரவணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில் மதுரை நாடார் மகாஜன சங்க பொதுச்செயலாளர் ஜி.கரிக்கோல்ராஜ் கலந்து கொண்டு புதிய நிர்வாகிகள் அறிமுகம் செய்து உறுப்பினர் அட்டை வழங்கி சிறப்புரை ஆற்றினார். உலக வர்த்தகரும் கோவை நாடார் சங்க தலைவருமான டாக்டர் ஆர்.பாஸ்கரன் நாடார், கோவை மாவட்ட வர்த்தக சங்க தலைவர் டி.முத்துப்பாண்டி ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.
விழாவில் கோவை நாடார் சங்க பொதுச் செயலாளர் எஸ்.ஆர்.விமலராகவன், பொருளாளர் சி.ராஜமாணிக்கம், நாடார்
மகாஜன மண்டல செயலாளர் ஐ.சி.ஈஸ்வரன், மாவட்ட செயலாளர் கே.ஆர்.தயாநிதி உள்பட பலர் கலந்து கொண்டனர். 500க்கும் மேற்பட்ட நாடார் சமுதாய மக்கள் திரண்டு குடும்ப விழா போல் நடைபெற்றது.



