கோவை, செப். 01 –
பொள்ளாச்சி மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் பட்டாம்பூச்சி சமூக நல அறக்கட்டளை மற்றும் பட்டாம்பூச்சி பண்பலை சார்பில் நோயாளிகள் மற்றும் ஆதரவற்றோர்களுக்கு அனைத்து ஞாயிற்றுக்கிழமைகளில் உணவு வழங்கும் நிகழ்ச்சி துவங்கப்பட்டது.
இந்நிகழ்ச்சிக்கு பட்டாம்பூச்சி குழுமங்களின் ஒருங்கிணைப்பாளர் கவிஞர் பொள்ளாச்சி முருகானந்தம் தலைமை தாங்கினார். பட்டாம்பூச்சி பண்பலை மேலாளர் முனைவர் கிருஷ்ணா கணேஷ், நேதாஜி இளைஞர் பேரவை தலைவர் வெள்ளை நடராஜ், நோயாளிகள் நல சங்க உறுப்பினர்கள் மண்ணூர் ராமர், சுப்ரமணியன், முதலுதவி சமூக நல அறக்கட்டளை நிறுவனர் முனைவர் அபு. இக்பால் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் பொள்ளாச்சி தமிழிசை சங்க துணைச் செயலாளர் சி. முரளி கிருஷ்ணன் கலந்து கொண்டு அன்னதான நிகழ்ச்சியை துவங்கி வைத்தார்.
இந்நிகழ்ச்சியில் மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளின் உறவினர்கள் மற்றும் ஆதரவற்றோர் கலந்து கொண்டு உணவு மற்றும் இனிப்பு, தண்ணீர் பாட்டில்களை பெற்றுக் கொண்டனர். கோவை தெற்கு மாவட்ட தவெ.க வழக்கறிஞர் அணி அமைப்பாளர் ரேணுகா தேவி, நோயாளிகள் நலச் சங்க உறுப்பினர் J.S. கிட்டான், கணேஷ், வி.எஸ்.ஆர்.கே. மோகன், பிரதீப் குமார் உள்ளிட்ட அறக்கட்டளை நிர்வாகிகள் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்து கொண்டனர்.



