வேலூர் ஜீலை:25
வேலூர் மாவட்டம் காட்பாடி சித்தூர் பேருந்து நிலையம் அருகில் அதிமுக சார்பில் மின் கட்டண உயர்வை கண்டித்தும் மற்றும் நியாய விலை கடையில் வழங்கப்பட்டு வரும் பருப்பு, பாமாயில் ஆகியவற்றை நிறுத்த முயற்சிக்கும் திமுக அரசை கண்டித்து கண்டனஆர்ப்பாட்டம்
நடைபெற்றது.
வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ் ஆர் கே அப்பு தலைமையில் நடைபெற்ற
இந்த ஆர்ப்பாட்டத்தில் சிறப்பு அழைப்பாளராக தலைமைக் கழக பேச்சாளர் கோபி காளிதாஸ் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினார்.
இதில் காட்பாடி ஒன்றிய செயலாளர் கே.எஸ்.சுபாஷ், பகுதி செயலாளர் ஜனார்த்தனன், பேரவை இரவி, பி.நாராயணன், குப்புசாமி, மாநகராட்சி மாமன்ற உறுப்பினர் கே.பி.ரமேஷ், வேலூர் மாவட்ட எம்ஜிஆர் இளைஞர் அணி செயலாளர் எஸ்.பி.ராகேஷ், அம்மா பேரவை மாவட்ட செயலாளர் அமர்நாத், மாவட்ட எம்ஜிஆர் மன்ற செயலாளர் ராஜசேகர், மற்றும் வட்டச் செயலாளர் எழிலரசன், ஏழுமலை, ஆட்டோ ராஜ், ஜெயக்குமார், மகளிர் அணி சேர்ந்த தேவிகா, லட்சுமி, மற்றும் அதிமுக நிர்வாகிகள் சுமார் 200-க்கும் மேற்பட்டோர் ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டனர்.



