ஜன:17
திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளம் வட்டம் சங்கரம்மாநல்லூர் பேரூராட்சி அலுவலக வளாகத்தில் சமத்துவ பொங்கல் விளையாட்டு போட்டிகள் நடைபெற்றது. காலை 9 மணி அளவில் நடைபெற்ற விழாவில் பொள்ளாச்சி பாராளுமன்ற உறுப்பினர் ஈஸ்வர சாமி விழாவினை துவக்கி வைத்தார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் ஜெயராமகிருஷ்ணன் ஒன்றிய செயலாளர் சாகுல் ஹமீது பேரூராட்சி தலைவர் மல்லிகா கருப்புசாமி துணைத்தலைவர் பிரேமலதா உத்தம ராஜ் தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் கோவை தாமோதரன் பேரூராட்சி ஊழியர்கள் ஊர் பொதுமக்கள் பெரும் திரளாக கலந்து கொண்டனர்.