வருகிற 14-ந் தேதி டாக்டர் அம்பேத்கர் பிறந்த நாளை முன்னிட்டு ஈரோடு மாவட்ட ஆட்சியரக அலுவலக கூட்டரங்கில் மாவட்ட ஆட்சித்தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமையில் சமத்துவ நாள் உறுதிமொழி ஏற்பு நிகழ்ச்சி நடந்தது. இதில் ஈரோடு நாடாளுமன்ற உறுப்பினர் பிரகாஷ், திருப்பூர் நாடாளுமன்ற உறுப்பினர் சுப்பராயன், சட்டமன்ற உறுப்பினர்கள் வெங்கடாசலம் (அந்தியூர்), சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுஜாதா வணிகவரி ஈரோடு கோட்ட இணை ஆணையர் தாக்கரே சுபம் ஞானதேவ்ராவ் மாவட்ட வருவாய் அலுவலர் சாந்த குமார், துணை இயக்குநர் (சத்தியமங்கலம் புலிகள் காப்பகம்) திரு.குலால் யோகேஷ் விலாஸ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் முகமது குதுரத்துல்லா (பொது), மற்றும் அனைத்து துறை உட்பட பலர் பங்கேற்றனர்.



