மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் , அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக 8 மாற்றுத்திறனாளிகளுக்கு ரூ.1 இலட்சத்து 78 ஆயிரத்து 765 மதிப்பிலான நலத்திட்ட உதவிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் வழங்கினார்.
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் தலைமையில் நடைபெற்றது.
மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் தெரிவித்ததாவது:
கிருஷ்ணகிரி மாவட்டத்தில், வாரந்தோறும் திங்கட் கிழமை அன்று மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டம் நடைபெற்று வருகிறது. அதனடிப்படையில் நடைபெற்ற மக்கள் குறை தீர்க்கும் நாள் கூட்டத்தில் பொதுமக்களிடம், வீட்டுமனைப் பட்டா, விலையில்லா தையல் இயந்திரம், சலவைப் பெட்டி, முதியோர் உதவித்தொகை, கலைஞர் மகளிர் உரிமைத்தொகை, சாலை வசதி மற்றும் மின் இணைப்பு போன்ற பல்வேறு கோரிக்கைகள் குறித்து 377 மனுக்கள் பெற்றுக்கொள்ளப்பட்டது. இக்கூட்டத்தில் பெற்றுக்கொள்ளப்பட்ட மனுக்களில் தகுதியான மனுக்கள் மீது துறை சார்ந்த அலுவலர்கள் உடனடி நடவடிக்கை எடுக்கவும், தகுதியில்லாத மனுக்களுக்கு உரிய விளக்கத்தினை மனுதாரருக்கு தெரிவிக்க வேண்டும் 6T60T துறை சார்ந்த அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சித்தலைவர் .ச.தினேஷ் குமார் ., அவர்கள் தெரிவித்தார்.
தொடர்ந்து, மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள், மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பாக, 10, 11 மற்றும் 12 -ம் வகுப்பு படிக்கும் கண்பார்வையற்ற 7 மாற்றுத்திறனாளி மாணவ, மாணவியர்களுக்கு தலா ரூ.10,395 வீதம் மொத்தம் ரூ.72 ஆயிரத்து 765 மதிப்பில் எழுத்தை பெரிதாக்கி தரும் கருவிகள் (உருபெருக்கி) மற்றும் தேன்கனிக்கோட்டையைச் சேர்ந்த இரண்டு கால்கள், கைகள் பாதிக்கப்பட்ட செல்வி.வெங்கட்டம்மா என்ற மாற்றுத்திறனாளிக்கு ரூ.1 இலட்சத்து 6 ஆயிரம் மதிப்பில் மின்கலன் பொருத்திய சக்கர நாற்காலியை வழங்கினார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வருவாய் அலுவலர் .அ.சாதனைக்குறள், தனித்துணை ஆட்சியர் (சமூக பாதுகாப்பு திட்டம்) .சி.பன்னீர்செல்வம், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் .ரமேஷ்குமார், மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நல அலுவலர் .முருகேசன் உள்ளிட்ட அனைத்து துறை முதன்மை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.