ராமநாதபுரம் மாவட்டம் ராமநாதபுரம் ஊராட்சி ஒன்றியம் சக்கரக்கோட்டை ஊராட்சியில் தொடர் மழை காரணமாக மேலச்சோத்தூரணி குடியிருப்பு பகுதியில் மழை நீர் புகுந்ததை அடுத்து அங்குள்ள மக்கள் பாதுகாப்பாக சமுதாயக் கூடத்தில் தங்க வைக்கப்பட்டு தேவையான உணவுகள் வழங்கப்பட்டு வருகிறது. சமுதாயக்கூடத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள மக்களை மாவட்ட ஆட்சித் தலைவர் சிம்ரன் ஜீத்சிங் காலோன் நேரில் சந்தித்து அவர்களின் தேவைகள் குறித்து கேட்டறிந்தார். சக்கரக்கோட்டை ஊராட்சி மன்ற தலைவர் யாழினி உடன் இருந்தார்.



