பட்டுக்கோட்டை ஏப் 14
உலகம் போற்றும் மக்கள் கவிஞர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரத்தின் 95 வது பிறந்த நாள் விழா தமிழக அரசின் சார்பில் பட்டுக்கோட்டையில் உள்ள அவரது மணிமண்டபத்தி்ல் கொண்டாடப்பட்டது. 1993 ஆம் ஆண்டு அப்போது இருந்த தமிழக அரசால் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் படைப்புகள் அனைத்தும் அரசுடமையாக்கப்பட்டது. அதனை தொடர்ந்து பட்டுக்கோட்டையில் முத்துப்பேட்டை சாலையில் கவிஞர் கல்யாண சுந்தரத்திற்கு மணிமண்டபம் கட்டி திறந்து வைத்து ஏப்ரல் 13 ம் தேதி அவரது பிறந்த நாளை அரசு விழாவாக தமிழக அரசு அறிவித்தது. அதனைத் தொடர்ந்து ஒவ்வொரு வருடமும் ஏப்ரல் 13 ஆம் தேதி மாவட்ட செய்தி தொடர்பு அலுவலகம் சார்பில் ஏற்பாடு செய்யப்பட்டு மாவட்ட கலெக்டர் பட்டுக்கோட்டை கல்யாணசுந்தரம் திரு உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செய்வார். இந்த வருடம் பட்டுக்கோட்டை ஆர்டிஓ சங்கர் மாலை அணிவித்து மரியாதை செய்தார். அவரைத் தொடர்ந்து தாசில்தார் தர்மேந்திரா, நகராட்சி தலைவர் சண்முகப்பிரியா, நகராட்சி ஆணையர் கனிராஜ், திமுக மாவட்ட பொறுப்பாளர் பழனிவேல், மாவட்ட பிஆர்ஓ மதியழகன், திமுக மாவட்ட சிறுபான்மையினர் பிரிவு தலைவர் ஹாஜா முகைதீன் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.