தருமபுரி கடை வீதியில் எழுந்தருள் பாலித்து வரும் ஸ்ரீ அம்பிகா பரமேஸ்வரி அம்மன் சமேத ஸ்ரீ மருத வாணேஸ்வரர் திருக்கோவிலில் உள்ள ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சிவசுப்பிரமணிய சுவாமிக்கு பங்குனி உத்திரத்தை முன்னிட்டு மஹா அபிஷேகம், தீபாராதனை நடைபெற்றது. இதே தொடர்ந்து ஸ்ரீ வள்ளி தெய்வானை சமேத சிவ சுப்பிரமணியர் சுவாமிக்கு ஊர் மக்கள் சார்பில் திருக்கல்யாண சீர்வரிசை செலுத்திய பிறகு திருக்கல்யாண வைபவம் வெகு விமர்சையாக நடைபெற்றது .இதில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி திரு கல்யாண கோலத்தில் மேளதாளம் முழங்க திருவீதி உலா நடைபெற்றது. பக்தர்களுக்கு அன்னதான வழங்கப்பட்டது . விழாவிற்கான ஏற்பாடுகளை கந்த சஷ்டி விழாக் குழுவினர்கள் செய்திருந்தனர்.



