நீலகிரி. மார்.08
நீலகிரி மாவட்டம் கக்குச்சி பஞ்சாயத்துக்கு உட்பட்ட பாக்கியநகர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் 60க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் கல்வி பயின்று வருகின்றனர். ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை 21 மாணவ மாணவிகள் படித்து வருகின்றனர் இப்பள்ளியில் நியமனம் செய்யப்பட்ட ஆசிரியர் நஞ்சுண்டன் இடைநிலை ஆசிரியர்
பள்ளியில் ஒழுங்கீனமாக நடந்து கொண்டதால் பள்ளி ஆசிரியர் ஊர் பொதுமக்கள் பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர்கள் ஆகியோர் அவரை வேறு பள்ளிக்கு இடமாற்றம் செய்து பள்ளியில் இருந்து நீக்கப்பட்டனர். அவரை முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் திருமதி கோமதி அவர்களிடம் நடவடிக்கை எடுக்க புகார் அளிக்கப்பட்டு அவரை ஊராட்சி ஒன்றிய துவக்கப்பள்ளி மொரக்குட்டி பள்ளிக்கு மாற்று பணி ஆணை வழங்கப்பட்டது. கடந்த 2024 ஜூன் முதல் வேறு ஊராட்சி ஒன்றிய பள்ளியிலிருந்து சித்ரா என்ற இடைநிலை ஆசிரியை மாற்றுப் பணி ஆணை வழங்கப்பட்டு கடந்த டிசம்பர் 2024 வரை பணியாற்றி வந்தார். ஆனால் உதகை வட்டார கல்வி அலுவலர் வனிதா ஜனவரி 2025 முதல் மாற்றுப் பணி ஆணையை ரத்து செய்து ஆணை வழங்கியுள்ளார். இதனால் மாணவ மாணவிகளின் படிப்பு கடந்த இரண்டு மாதங்களாக பாதிக்கப்பட்டு வருகிறது. பலமுறை வட்டார கல்வி அலுவலர் அவர்களை தொலைபேசியில் தொடர்பு கொண்ட பொழுதும் மாற்றுப் பணி ஆணை வழங்க இயலாது என அலட்சியமாக பதில் அளித்துள்ளார். மேலும் ஊர் சார்பாக கல்வி மேலாண்மை குழு சார்பாக புகார் மனுக்கள் அனுப்பியும் இதுவரை மாற்று ஆசிரியர் பணி பாக்கியநகர் பள்ளிக்கு வழங்கப்படவில்லை. ஒன்றாம் வகுப்பு முதல் மூன்றாம் வகுப்பு வரை ஆசிரியர் இல்லாததால் அவர்களின் கல்வி பாதிக்கப்படும் சூழ்நிலை உறுவாகியுள்ளது. மேலும் 2025 – 2026ஆம் கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை பாதிக்கப்படும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. எனவே மாணவர்களின் நலன் கருதி மாவட்ட நிர்வாகம் சம்பந்தப்பட்ட துறை மூலம் பாக்கியநகர் பள்ளிக்கு உடனடியாக ஆசிரியரை நியமிக்க வேண்டும் என இப்பள்ளியின் கல்வி மேலாண்மை குழு மற்றும் பெற்றோர்கள் கோரிக்கை வைத்துள்ளனர். மாணவர்களின் பெற்றோர்கள், பள்ளி கல்வி குழுவினர், ஆசிரியர்கள் வேண்டுகோளை ஏற்று மாணவர்கள் மீண்டும் வகுப்புக்கு சென்றனர்.