வேலூர் 22
வேலூர் மாவட்டம் வேலூர் அடுத்த பெண்ணாத்தூர் மெரிடியன் பள்ளி மற்றும் தி ஐ பவுண்டேஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை இணைந்து நடத்திய கண் மருத்துவ முகாம் மெரிடியன் பள்ளியில் நடைபெற்றது. முகாமில் தூரபார்வை, கிட்டபார்வை ,கண்களில் நீர் வடிதல், சர்க்கரை அளவு, இரத்த கொதிப்பு, ஆகியவற்றிற்கான பரிசோதனைகள் மேற்கொண்டு மருத்துவர்கள் முகாமில் கலந்து கொண்டவர்களுக்கு ஆலோசனைகள் வழங்கினர் உடன் மெரிடியன் பள்ளியின் தாளாளர் எம்..தியாகராஜன், பள்ளியின் முதல்வர் ரூபகலா ,தி ஐ பவுண்டேஷன் சூப்பர் ஸ்பெஷாலிட்டி கண் மருத்துவமனை முகாம் ஒருங்கிணைப்பாளர் எம். சையத்ஜுனைத் மற்றும் பள்ளியின் ஆசிரியர்கள் ,மருத்துவர்கள், செவிலியர்கள், பெற்றோர்கள், பலர் கலந்து கொண்டனர்.