பென்னாகரத்தைச் சேர்ந்த பத்தாம் வகுப்பு படிக்கும் பள்ளி மாணவர் குடும்ப வறுமை காரணமாக தினமும் இரண்டு மணி நேரம் தேநீர் விற்று பின்பு பள்ளிக்கு சென்று படித்து வருவதாக சமூக ஊடகங்களில் வரப்பெற்ற செய்தியை அடுத்து மாணவனின் குடும்ப சூழ்நிலையை அறிந்து ”அரசு அடுக்கு மாடி குடியிருப்பில்” விட்டுமனை ஒதுக்கீடு செய்வதற்கான தொகையில் ரூபாய் 30 ஆயிரம் தன் விருப்ப நிதியிலிருந்து மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி வழங்கினார். மேலும், எஸ்.வி.கே பவுண்டேசன் – தொண்டு நிறுவனம் சார்பில் ரூபாய் 1 இலட்சமும் வழங்கப்பட்டுள்ளதால், மாணவர் அப்சர் என்பவருக்கு பென்னாகரம், போடூர் அரசு அடுக்குமாடி குடியிருப்பில் வீட்டுமனை ஆணை வழங்கப்பட்டது. . உடன் உதவி நிர்வாக பொறியாளர் முருகதாசன், எஸ்.வி.கே பவுண்டேசன்-தொண்டு நிறுவனத்தின் முதன்மை மேலாளர் வி.நடராஜன் ஆகியோர் உள்ளனர்.



