திருப்பத்தூர்:மே:27, திருப்பத்தூர் மாவட்டம்
ஆம்பூர் சட்டமன்ற தொகுதி மாதனூர் மேற்கு ஒன்றியம்
வெங்கடசமுத்திரம் ஊராட்சியில் தமிழக வெற்றிக் கழகம் சார்பில்
அலுவலகம் மற்றும் நீர் மோர் பந்தல் திறந்து வைக்கப்பட்டது.
இணை செயலாளர் வெங்கடேஸ்வரன்
அனைவரும் வரவேற்றார்.
செயலாளர் கிஷோர் ,பொருளாளர்.அர்ஜுன்,துணைச் செயலாளர் விஜய் ரேகா ஆகியோர்
தலைமை தாங்கினார்கள்.
இதில் சிறப்பு அழைப்பாளராக தவெக தமிழக வெற்றிக் கழகத்தின் திருப்பத்தூர் மாவட்ட (கிழக்கு) செயலாளர் நவீன்குமார்
மற்றும்
திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட இணை செயலாளர்
சரவணன்,
ஆம்பூர் நகர செயலாளர் மதன் ஆகியோர் கலந்து கொண்டு தவெக
அலுவலகத்தினை குத்துவிளக்கு ஏற்றி
திறந்து வைத்தார்கள்.
பின்னர்
தண்ணீர் பந்தல் நீர்மோர்,இளநீர் மற்றும் பழங்கள்
பொதுமக்களுக்கு சுமார் 500 பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.
செயற்குழு உறுப்பினர் கோவிந்தராஜ், மதன்குமார், ஹரிஷ்
ஆகியோர்
முன்னிலை வகித்தனர்.
இந்த நிகழ்ச்சியில்
உள்ளாட்சி பிரதிநிதிகள்
கிளை வட்டம் மாவட்டம் செயலாளர் பொருளாளர்
கட்சி நிர்வாகிகள் பொதுமக்கள் இளைஞர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் தவெக நிர்வாகி
மேற்கு ஒன்றிய பொறுப்பாளர்கள் துணை செயலாளர் ரவிசங்கர், பொருளாளர் சுமன், துணை செயலாளர் புனிதா, இளைஞர் அணி செயலாளர் ராஜு இளைஞர் அணி துணைச் செயலாளர் தேன்மொழி
மற்றும் திருப்பத்தூர் கிழக்கு மாவட்ட வழக்கறிஞர் பிரிவு லோகேஷ் இறுதியாக நன்றி கூறினார்.