மதுரை செப்டம்பர் 16,
மதுரை, வைகை அணையில் ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை திறந்து வைத்த அமைச்சர்
தேனி மாவட்டம், வைகை அணையிலிருந்து ஒரு போக பாசனத்திற்கான தண்ணீரை வணிகவரி மற்றும் பதிவுத்துறை அமைச்சர் பி.மூர்த்தி, தேனி மாவட்ட ஆட்சித்தலைவர் ஆர்.வி.ஷஜீவனா, இ.ஆ.ப. அவர்கள், மதுரை மாவட்ட ஆட்சித்தலைவர் மா.சௌ.சங்கீதா, திண்டுக்கல் மாவட்ட ஆட்சித்தலைவர் மொ.நா.பூங்கொடி ஆகியோர் முன்னிலையில் திறந்து வைத்தார்கள்.
இந்நிகழ்வில் தேனி பாராளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்செல்வன், ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் ஆ.மகாராஜன் ஆகியோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர். தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி, தேனி மாவட்டம் வைகை அணையிலிருந்து பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசனப் பரப்பாகிய 85,563 ஏக்கர் நிலங்களுக்கு மற்றும் திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசனப் பரப்பாகிய 19,439 நிலங்களுக்கு ஆக மொத்தம் 1,05,002 ஏக்கர் நிலங்களுக்கு வினாடிக்கு 1,130 கனஅடி வீதம் 45 நாட்களுக்கு முழுமையாகவும், 75 நாட்களுக்கு முறை வைத்தும் இன்று முதல் மொத்தம் 120 நாட்களுக்கு 8,461 மில்லியன் கன அடி நீர் இருப்பு மற்றும் நீர் வரத்தை பொறுத்து தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதன்படி, பெரியாறு பாசனப்பகுதியில் ஒரு போக பாசன நிலங்கள் வைகை அணையிலிருந்து தண்ணீர் திறப்பதால் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 53 ஏக்கர் நிலங்களுக்கும். மதுரை மாவட்டம். வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 5,697 ஏக்கர் நிலங்களுக்கும், மதுரை வடக்கு வட்டத்திற்குட்பட்ட 24,811 ஏக்கர் நிலங்களுக்கும், மேலூர் வட்டத்திற்குட்பட்ட 48,963 ஏக்கர் நிலங்களுக்கும். சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் வட்டத்திற்குட்பட்ட 478 ஏக்கர் நிலங்களுக்கும். சிவகங்கை வட்டத்திற்குட்பட்ட 5,561 ஏக்கர் நிலங்களுக்கும். திருமங்கலம் பிரதானக் கால்வாயின் கீழ் உள்ள ஒரு போக பாசன நிலங்கள் திண்டுக்கல் மாவட்டம், நிலக்கோட்டை வட்டத்திற்குட்பட்ட 146 ஏக்கர் நிலங்களுக்கும், மதுரை மாவட்டம், வாடிப்பட்டி வட்டத்திற்குட்பட்ட 1,201 ஏக்கர் நிலங்களுக்கும், உசிலம்பட்டி வட்டத்திற்குட்பட்ட 13,723 ஏக்கர் நிலங்களுக்கும், திருமங்கலம் வட்டத்திற்குட்பட்ட 3,982 ஏக்கர் நிலங்களுக்கும், பேரையுர் வட்டத்திற்குட்பட்ட 387 ஏக்கர் நிலங்களுக்கும். என மொத்தம் 1.05,002 ஏக்கர் நிலங்களுக்கு பாசன வசதி பெறும் வகையில் தண்ணீர் திறந்து வைக்கப்பட்டுள்ளது. மதுரை, திண்டுக்கல் மற்றம் சிவகங்கை மாவட்டங்களை சார்ந்த விவசாயப் பெருங்குடி மக்கள் இந்நீரை சிக்கனமாக பயன்படுத்தி, நீர் மேலாண்மை மேற்கொண்டு உயர் மகசூல் பெற்று பயன்பெற வேண்டும் என தெரிவித்துகொள்ளப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், பெரியகுளம் சார் ஆட்சியர் ரஜத் பீடன், தேனி-அல்லிநகரம் நகர்மன்ற தலைவர் தி
ரேணுபிரியா, செயற்பொறியாளர்கள் (பெரியாறு வைகை வடிநிலக் கோட்டம்) ந.அன்புச்செல்வம், (பெரியாறு பிரதானக் கால்வாய்) சிவபிரபாகரன், உதவி செயற்பொறியாளர் (வைகை அணை உபகோட்டம்) பா.முருகேசன் மற்றும் உள்ளாட்சி அமைப்புகளின் பிரநிதிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.