தஞ்சாவூர். அக்.15
தஞ்சாவூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக் கை நடவடிக்கைகளை மாவட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் ஆய்வு செய்தார்.
தஞ்சாவூர் அருகே கூடலூர் வெண்ணாற்றங்கரையில் மழைநீர் இருப்பை பார்வையிட்ட ஆட்சித் தலைவர் பிரியங்கா பங்கஜம் வடகிழக்கு பருவ மழைக்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கை குறித்து வருவாய் துறை அலுவலர் களுடன் ஆய்வு செய்தார் .பின்னர் வடவாற்றங்கரையோரம் பார்வை யிட்ட ஆட்சியர் அப்பகுதியில் குடியிருக்கும் பொது மக்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் அடிப்படை வசதிகளை மேம்படுத்து வது தொடர்பாக துறை அலுவலர் களுக்கு உத்தரவிட்டார். மழைக் காலத்தில் ஆற்றின் கரையோரம் செல்லாமல் பாதுகாப்பாக இருக்கு மாறு பொதுமக்களிடம் அறிவுறுத் தினார் .ஆய்வின் போது வருவாய் கோட்டாட்சியர் இலக்கியா, வட்டாட்சியர்கள் அருள்ராஜ் (தஞ்சாவூர்) சிவக்குமார் (பேரிடர் மேலாண்மை துறை) மற்றும் அலுவலர்கள் கலந்து கொண்டனர்