நீலகிரி. மே. 13
நீலகிரி மாவட்டத்தில் காய்கறி கண்காட்சி ரோஜா கண்காட்சி, பழ கண்காட்சி, மலர்க் கண்காட்சி, மலைபயிர்கள் கண்காட்சி என சுற்றுலா மாதத்தில் தொடர்ந்து நடக்கிறது கூடலூரில் நடந்த வாசனை திரவிய கண்காட்சியை தமிழக செய்தி துறை அமைச்சர் மு.பெ. சாமிநாதன் திறந்து வைத்தார். நிகழ்ச்சியில் தமிழக அரசு கொறடா ராமச்சந்திரன் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு தமிழக அரசின் மக்கள் நலத் திட்டங்களை எடுத்துரைத்தனர் முன்னதாக நிகழ்ச்சியின் முதல் நாள் இரவு 7 மணியளவில் நீலகிரி குறிஞ்சி ராமமூர்த்தி தலைமையில் அன்பான அறிவுக்கு தேவை அறிவா பொருளா என்ற தலைப்பில் பட்டிமன்றம் நடைபெற்றது.
நிகழ்ச்சியில் சங்க , கிருஷ்ணகுமார், சிவா மாஸ்டர், இரா சேகர் சுருதி கிருஷ்ண கிருஷ்ணகுமாரி அரசன் ஆகியோர் பேசினர் மூன்று நாள் நடக்கும் இக்கண்காட்சியில் வெந்தயம் கசகசா சீரகம், ஜாதி பத்திரி, கருஞ்சீரகம், மிளகு கிராம்பு, லவங்கம், பட்டை, உள்ளிட்ட 13 வகையான எண்பது கிலோ எடையுள்ள வாசனை பொருட்களால் ஆன குன்னூர் ரயில் நிலையம், இந்திய வரைபடம், வாசனை திரவிய அலங்கார வளைவு மற்றும் வண்ணத்துப்பூச்சி செல்பி ஸ்பாட் ஆகியவை உருவாக்கப்பட்டு காட்சிக்கு வைக்கப்பட்டது .
கண்காட்சியில் ஐந்தடி நீளம் ஆறடி உயரம் 4 அடி அகலத்தில் குன்னூர் ரயில் நிலையம் ஐந்தடி நீளம் 7 அடி உயரத்தில் வண்ணத்துப்பூச்சி மாதிரி செல்பி ஸ்பாட் 24 அடி நீளம் 12 அடி உயர வாசனை திரவிய அலங்கார வளைவு மற்றும் இந்திய வரைபடம் ஆகியவை இதற்காக உருவாக்கப்பட்டுள்ளன. கூடலூர் நகராட்சி சார்பில் கழிவு பிளாஸ்டிக் பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள அரக்கன் உள்ளிட்ட பல்வேறு வடிவங்கள் இக்கண்காட்சியில் வைக்கப்பட்டுள்ளன மேலும் பழங்கள், காய்கறிகள், இயற்கை விவசாய இடுப்பொருட்கள் இயற்கை வேளாண்மை பற்றிய பொருட்கள், உள்ளிட்டவத்திற்கான கண்காட்சி அரங்குகளும் அமைக்கப்பட்டுள்ளன.
இக்கண்காட்சிக்காக அமைக்கப்பட்டுள்ள 50 அரங்குகளில் அரசு துறை மற்றும் தனியார் அமைப்புகள் சார்பில் கண்காட்சிகள் வைக்கப்பட்டுள்ளன மேலும் பொழுதுபோக்கு அம்சங்களான ராட்டினம், மினி ரயில், உள்ளிட்ட பல்வேறு வகையான அம்சங்கள் பொதுமக்களை கவர்ந்து வருகிறது கண்காட்சியை துவக்கி வைத்து அரங்கு பகுதிகளுக்கும் சுற்றுலா பயணிகள் வந்து செல்லும் வகைகளில் திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகின்றன மற்றும் நிகழ்ச்சியை காண பல சுற்றுலாப் பயணிகள் வாசனை திரவிய கண்காட்சிக்காக வந்து கொண்டிருக்கின்றனர்.
நிகழ்ச்சியில் திமுக மாவட்ட செயலாளர் கே எம் ராஜு, மற்றும் வேளாண் மற்றும் அரசு துறை அதிகாரிகள் கூடலூர் தாசில்தார், ஆகியோர் கலந்து கொண்டனர். உள்ளூர் மக்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்து வந்த சுற்றுலா பயணிகள் வாசனை திரவிய கண்காட்சி கண்டு ரசித்து வருகின்றனர் முடிவில் கூடலூர் தாசில்தார் முத்துமாரி நன்றி கூறினார். தொடர்ந்து கூடலூர் பகுதியில் கலை கலாச்சார நிகழ்ச்சிகளும் நடந்து வருகிறது.