திண்டுக்கல், ஆக. 22 –
மாநில அளவிலான 9 வயதுக்குட்பட்டோர் மற்றும் 14 வயதுக்குட்பட்ட ஆண்கள் மற்றும் பெண்களுக்கான ரோல்பால் போட்டிகள் நிகழ்ச்சி திண்டுக்கல் அனுக்கிரகா பள்ளியில் நடைபெற்றது. இப்போட்டியில் 30 மாவட்ட அணிகள் கலந்து கொண்டனர். இதில் திண்டுக்கல் மாவட்ட அணி 9 வயதுக்குட்பட்டோர் பிரிவில் ஆண்கள் மற்றும் பெண்கள் அணி ஆகியவை முதலிடம் பிடித்தனர். 14 வயதுக்குட்பட்ட பிரிவில் ஆண்கள் அணி முதலிடத்தையும், பெண்கள் அணி இரண்டாம் இடத்தையும் பிடித்தது. இதனால் ஒட்டுமொத்த சாம்பியன் பட்டத்தை திண்டுக்கல் மாவட்ட அணி வென்றது.
இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டியில் உள்ள ராஜன் உள்விளையாட்டு அரங்கில் பாராட்டு விழா நடைபெற்றது. இதில் தமிழ்நாடு ரோல்பால் சங்க துணைத் தலைவரும், சர்வதேச நடுவருமான மாஸ்டர் எம். பிரேம்நாத், தென்னிந்திய ரோல்பால் சங்க செயலாளர் சுப்பிரமணியம், பயிற்சியாளர்கள் தங்கலட்சுமி, சக்திவேல், கலையரசன், கல்யாண், ராஜதுரை மற்றும் பெற்றோர்கள், பொதுமக்கள் பலர் கலந்து கொண்டு பாராட்டி வாழ்த்தினர்.



