தருமபுரி மாவட்டம் ,பென்னாகரத்தில் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் உண்டு உறைவிடப் பள்ளி இயங்கி வருகிறது. இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 100 மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். இப்பள்ளியின் செயல்பாடுகள் குறித்து மாவட்ட ஆட்சியர் சதீஷ் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது மாணவர்களுக்கான அடிப்படை வசதிகள், அவர்களுக்கு அளிக்கப்படும் கல்வியின் தரம், உணவின் தரம் உள்ளிட்டவைகள் குறித்து கேட்டறிந்தார். மாணவர்கள் உணவு அருந்துவதற்கு இட வசதி ஏற்படுத்தி தர அளிக்கப்பட்ட கோரிக்கையின் மீது உரிய நடவடிக்கைகள் மேற்கொள்ள அலுவர்களுக்கு ஆட்சியர் அறிவுறுத்தினார். இது குறித்து அதிகாரிகள் கூறுகையில். இடையில் நின்ற குழந்தைகள் மற்றும் பின் தங்கிய நிலையில் உள்ள குழந்தைகள் கல்வி பயில்வதற்கு பள்ளிக் கல்வித் துறையின் ஒருங்கிணைந்த பள்ளிக் கல்வி திட்டத்தின் கீழ் இப்பள்ளி செயல்பட்டு வருகிறது.இப்பள்ளியில் இரண்டாம் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 100 மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர் என்றனர்.



