நீலகிரி. ஏப்ரல். 11
கோத்தகிரி அருகே உள்ள ஒரசோலை ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாவட்ட ஆட்சியர் ஆணைப்படி, சுற்றுச்சூழல் சார்ந்த துணிப்பை பயன்பாடு குறித்த விழிப்புணர்வு நடைபெற்றது.
நிகழ்வில் நீலகிரி மாவட்ட தேசிய பசுமைப் படை ஒருங்கிணைப்பாளர் V.சிவதாஸ் தலைமை தாங்கி, பிளாஸ்டிக் பயன்பாடு தவிர்த்தல் மற்றும் துணிப்பைகள் பயன்பாடு குறித்த விழிப்புணர்வை ஊட்டினார்.
பள்ளி தலைமை ஆசிரியர் நஞ்சுண்டன் மற்றும் வனக் காப்பாளர் வினோத் முன்னிலை வகித்தனர். பள்ளி ஆசிரியர்கள், பணியாளர்கள், குழந்தைகள் அனைவருக்கும் சுற்றுச்சூழல் வாசகங்கள் பொறித்த துணிப்பைகள் பயன்பாட்டுக்காக வழங்கபட்டன. அதனை மாணவர் தலைவர் பிரியதர்ஷினி பெற்று கொண்டார். வனங்கள், மரங்கள் பாதுகாப்பு குறித்து வனக் காப்பாளர் வினோத் வழங்கினார். இதில் ஆசிரியர்கள் மேகராஜ், கமலா, பணியாளர் செந்தமிழ் செல்வி , பள்ளி குழந்தைகள் பங்கேற்றனர்.
பள்ளியில் தேசிய பசுமை படை விழிப்புணர்வு

Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics