நாகர்கோவில், டிச. 24 –
நாகர்கோவில் மேற்கு மாநகர பாஜக சார்பில் மாநகர தலைவரும் நாகர்கோவில் மாநகராட்சி கவுன்சிலருமான சதீஷ் தலைமையில் முன்னாள் பாரத பிரதமர் வாஜ்பாய் பிறந்த நாளை முன்னிட்டு தூய்மை பாரதம் நிகழ்ச்சி நடைபெற்றது.
இதில் பட்டகசாலின்விளை ஏ.ஆர் கேம்ப் சாலையில் மாநகராட்சிக்கு சொந்தமான தினசரி குடிநீருக்காக பயன்படுத்தப்படும் ஆழ்துளை கிணறு சுற்றி உள்ள பகுதி, மின்சார குடிநீர் இயக்கும் அறை சுற்றி உள்ள பகுதி மற்றும் சாலை அருகில் உள்ள செடிகளை வெட்டி, குப்பைகளை அகற்றியும் துப்புரவு பணி செய்யப்பட்டது.
நிகழ்ச்சியில் பாஜக மாநில செயலாளர் மீனாதேவ், நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி கலந்துகொண்டு துப்புரவு பணியை தொடங்கி வைத்தனர். உடன் மாவட்ட பொது செயலாளர் சத்தியஸ்ரீ, ஊடக பிரிவுமாவட்ட தலைவர் சந்திரசேகர், மாமன்ற உறுப்பினர் தினகரன், வீரசூரபெருமாள், ஐடி பரிவு மாவட்ட செயலாளர் தங்கராஜா, மகளிர் அணி மாவட்ட செயலாளர் மலர், பொருளாதார பிரிவு மாவட்ட செயலாளர் விஜி, மாநகர பொதுச் செயலாளர் சிவராஜன், சகாதேவன், மாநகர் துணைதலைவர் சிவசுப்பிரமணியன், லூர்து மேரி, செயலாளர் விஜேந்திரன், நிர்வாகிகள் அழகேசன், முருகன் அருண், பிஜு, செல்வராஜன் கலந்து கொண்டனர்.



