தருமபுரி மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையின் சார்பில் “என் கல்லூரி கனவு” உயர்கல்வி வழிகாட்டி நிகழ்ச்சி விஜய் வித்தியாலயா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் நடந்தது. நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியர் சதீஷ் தலைமை வகித்து பேசியதாவது. மாணவர்கள் எந்த துறையில் சிறந்து விளங்க வேண்டும் என்பதை உறுதி செய்து கொண்டு, நம்பிக்கையுடன் உயர் படிப்பை பயில வேண்டும். உயர்கல்வி மீதான ஆர்வமும், நம்பிக்கையும் பெற்றோரை விட மாணவர்களுக்கு தான் அதிகம் இருக்க வேண்டும். மாணவர்களுக்கு உயர் கல்விக்கு வழிகாட்டும் ஆசனாக “என் கல்லூரி கனவு” நிகழ்ச்சி அமைந்துள்ளது. உயர்கல்வியில் மாணவர்களுக்கு உள்ள சந்தேகங்களை நீக்கி, அவர்களுடைய நம்பிக்கையை ஏற்படுத்துகிறது. இந்த வாய்ப்புகளை மாணவ, மாணவிகள் பயன்படுத்திக் கொண்டு உயர்கல்வியில் சேர வேண்டும். மாணவர்கள் தங்களுக்குள் உள்ள திறமையை கண்டறிந்து உயர் கல்வியை தேர்வு செய்தால் வெற்றி பெற முடியும் இவ்வாறு ஆட்சியர் பேசினார். இந்த நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜோதி சந்திரா, ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் தேன்மொழி, திட்ட அலுவலர் கண்ணன், மாவட்ட மேலாளர் வேல் முருகன், மண்டல ஒருங்கிணைப்பாளர் சங்கர், உயர்கல்வி வழிகாட்டுபவர் லியோ லெவின், உத்வேக பேச்சாளர் சாக்கன், மாவட்ட ஒருங்கிணைப்பாளர் குமரேசன், பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள்,தனி தாசில்தார் நர்கள், மலைவாழ் பழங்குடியின மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.



