அர்த்த மத்ஸ்யேந்திராசனா என்னும் யோகாசனத்தை 40 நிமிடம் தொடர்ந்து மாணவி அனன்யா செய்து நோவா உலகசாதனை
பெண்களிடம் யோகா குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் மாணவி அனன்யா ராம்குமார் அர்த்த மத்ஸ்யேந்திராசனா என்னும் யோகாசனத்தை 40 நிமிடம் செய்து நோவா உலகசாதனை படைத்து அசத்தினார்.
சென்னை பள்ளிக்கரணையை சேர்ந்த அனன்யா ராம்குமார். இவர் மீனாட்சி பல்கலைகழகத்தில் எம்.எஸ்.சி. யோகா தெரபி பயின்று வருகின்றார். இவர் யோகா மீது கொண்ட ஆர்வத்தில் யோகாவில் சாதனை படைக்க விரும்பினார். அதன்படி கீழ்கட்டளையில் உள்ள டி.எம்.எஸ்.யோகா ஸ்டுடியோவில் உலக சாதனை நிகழ்ச்சி இன்று நடைபெற்றது.
இதில் மாணவி அனன்யா ராம்குமார் அர்த்த மத்ஸ்யேந்திராசனா என்னும் யோகாசனத்தை வலது மற்றும் இடபுறம் தலா 20 நிமிடம் என மொத்தம் 40 நிமிடம் தொடர்ந்து செய்து அசத்தினார். இதனை நோவா உலக சாதனை இந்திய இயக்குனர் தீலிபன், நடுவர் பாலகிருஷ்ணவேல் ஆகியோர் பார்வையிட்டு உலகசாதனையை அங்கீகரித்தனர்.
அதனை தொடர்ந்து சாதனை படைத்த மாணவி அனன்யாவிற்கு டி.எம்.எஸ். யோகா ஸ்டுடியோவின் யோகா ஆசிரியர் முருகேசன், சண்முகதாய் ஆகியோர் நோவா உலக சாரனை விருதிற்கான சான்றிதழ் மற்றும் பதக்கத்தை வழங்கி கவுரவுத்தனர்.



