ஈரோடு மே 30
தமிழ்நாடு முதலமைச்சர் மு க ஸ்டாலின் சென்னையில் வேளாண்மை-உழவர் நலத்துறையின் சார்பில் காணொலி காட்சி வாயிலாக உழவரைத்தேடி வேளாண்மை – உழவர் நலத்துறைத் திட்டத்தினை தொடங்கி வைத்தார் . இதை தொடர்ந்து வீட்டுவசதி, மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் சு.முத்துசாமி ஈரோடு கதிரம்பட்டி ஊராட்சியில் இத்திட்டத்தினை துவக்கி வைத்தார். அப்போது அவர் வேளாண்மைத் சார்பில் விவசாயிகளுக்கு நெல் நுண்ணூட்டத்தினை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சிக்கு மாவட்ட ஆட்சி தலைவர் ராஜ கோபால் சுன்கரா தலைமை தாங்கினார்.ஈரோடு வட்டார வேளாண்மை உதவி இயக்குநர் சாமுவேல் வரவேற்றார். நிகழ்ச்சியில்வேளாண்மை துணை இயக்குநர் சீனிவாசன் திட்ட விளக்க உரை ஆற்றினார். நிகழ்ச்சியில் மாநிலங்களை உறுப்பினர் அந்தியூர் செல்வராஜ், சட்டமன்ற உறுப்பினர்கள் வி.சி.சந்திரகுமார் (ஈரோடு கிழக்கு), ஏ.ஜி.வெங்கடாசலம் (அந்தியூர்), ஈரோடு மாநகராட்சி மேயர் நாகரத்தினம் சுப்பிரமணியம், துணை செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர் . முடிவில் வேளாண்மை துணை இயக்குநர் அருள் வடிவேல் நன்றி கூறினார்.
வேளாண்மை நலத்துறை சார்பில் நலத்திட்ட உதவிகள் அமைச்சர் முத்துசாமி வழங்கினார்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics