தஞ்சாவூர். அக்.5
தமிழகத்தில் மகப்பேறு இறப்பு விகிதம் குறைக்கப்பட்டு, தேசிய அளவில் சாதனை நிகழ்த்தப்பட்டு வருகிறது என்றார். மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன்.
தஞ்சாவூரில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை பொது சுகாதாரம் மற்றும் நோய் தடுப்பு மருத்துவத்துறை சார்பில் நடைபெறும் மூன்றாவது சர்வதேச பொது சுகாதார மாநாட்டை தொடங்கி வைத்து ,அவர் செய்தியாளர்களிடம் கூறியதாவது:
மகப்பேறு இறப்பு விகிதம் இந்திய அளவில் ஒரு லட்சம் பேருக்கு 72 என உள்ள நிலையில், தமிழகத்தை கடந்த ஆண்டு 55 ஆக கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. ஓராண்டுக்குள் 55 லிருந்து 46 ஆக குறைந்துள்ளது. நிகழாண்டு தான் ஒரே ஆண்டில் 9 ஆக குறைந்திருக் கிறது..இது இந்திய அளவில் மகத்தான சாதனையாக உள்ளது.
தமிழ்நாட்டில் முழுமையான மகப்பேறு இறப்பு இல்லாத மாவட்டங்களாக விழுப்புரமும், விருதுநகரும் அறிவிக்கப்பட்டு ள்ளது. மகப்பேறு இறப்பு இல்லாத மாநிலமாக தமிழ்நாடு முன்னேறுகிறது.
புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி பகுதியில் உள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் ஒரே நாளில் 5 சுகப்பிரசவம் நடைபெற்று ள்ளது. தமிழக பொது சுகாதாரத் துறை மிகச் சிறப்பாக இருப்பதற்கு இதுவே உதாரணம். மயிலாடுதுறை யில் ஒரே ஊசியை பலருக்கும் பயன்படுத்தியது, தொடர்பாக வீடியோ காட்சி மூலம் கண்டறிந்து தொடர்புடைய செவிலியர் பணி யிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளார் மற்றவர்களுக்கு பாடமாக இருக்க வேண்டும் என்பதற்காக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
சுகாதார ஆய்வாளர்கள் 1,066 பேர், கிராம சுகாதார செவிலியர்களாக 2,253 பேர், மருத்துவர்களாக 2,550 பேர் பணி நியமனம் செய்யும் பணி தொடங்கப்பட்டுள்ளது. எம்.ஆர்.பி சார்பில் மருத்துவர் பணியிடங்களு க்கு தேர்வு அறிவிக்கப்பட்டுள்ளது ஆரம்ப சுகாதார நிலையங்களில் உள்ள 1066 பணியிடங்கள் உள்ள நிலையில், உயர்நீதிமன்றத்தில் 38 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு ள்ளது .கிராம சுகாதார செவிலியர் பணியிடங்களுக்கும், 30க்கும் அதிகமான வழக்குகள் தொடுக்கப் பட்டுள்ளன. வழக்கை தொடுப்ப தன் மூலம் பணியிடங்கள் நிரப்புவதில் காலதாமதம் ஏற்படுகிறது. எனவே வழக்குத் தொடுப்பவர்கள் எங்களிடத்தில் வந்தால், பேசி சுமுக தேர்வு காணப்படும்.
சென்னை எழும்பூரில் உள்ளது போன்ற குழந்தைகளுக்கான மருத்துவமனை சென்னையில், மற்றொன்றும் தஞ்சாவூரில் ஒன்றும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார் அமைச்சர்.
விழாவில் மாவட்ட ஆட்சியர் பிரியங்கா பங்கஜம் மக்களவை உறுப்பினர் முரசொலி சட்டப்பேரவை உறுப்பினர்கள் துரை. சந்திரசேகரன் (திருவையாறு) டி கே ஜி நீலமேகம் (தஞ்சாவூர்) மேயர்கள் சண் ராமநாதன் (தஞ்சாவூர்) சரவணன் (கும்பகோணம் ) பொது சுகாதார மற்றும் நோய் தடுப்பு மருத்துவ துறை இயக்குனர் செல்வவிநாய கம் ,கூடுதல் இயக்குனர் சம்பத் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
முன்னதாக புதிய பேருந்து நிலையத்திலிருந்து மேல வஸ்தா சாவடி ரவுண்டானாவரை பேரணி நடைபெற்றது .இந்த மாநாடு தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகிறது.