தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களால் அறிவிக்கப்பட்ட ”உங்களைத் தேடி உங்கள் ஊரில்” திட்டத்தின் கீழ் தருமபுரி மாவட்டம், பாப்பிரெட்டிப்பட்டி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் அனைத்து துறை அதிகாரிகளுடனான ஆய்வு கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கி.சாந்தி அவர்கள் தலைமையில் நடைபெற்றது. உடன் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் மகேஸ்வரன், கூடுதல் ஆட்சியர் (வளர்ச்சி) கௌரவ்குமார் மாவட்ட வருவாய் அலுவலர் ஆர்.கவிதா, வருவாய் கோட்டாட்சியர் சின்னசாமி, வட்டாட்சியர் வள்ளி உட்பட அரசுத்துறை அலுவலர்கள் உள்ளனர்.



