சென்னை,
கே.கே.நகரில் அமைந்துள்ள அருள்மிகு ஸ்ரீ வலம்புரி மல்டி விநாயகர் மற்றும் அனைத்து தேவதைகளுக்கும் திரயோதசி திதி அஸ்வினி நட்சத்திரம் சித்தயோகம் கூடிய சுபயோக சுபதனத்தில் மகா கும்பாபிஷேக விழா வெகு விமர்சியாக நடைபெற்றது, கும்பாபிஷேக விழாவில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். வருகை தந்த பக்தர்கள் அனைவருக்கும் அன்னதானம் வழங்கப்பட்டது, இந்த விழாவுக்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஆலய நிர்வாகிகள் ஜெயராமன் சுந்தர்ராஜ் செந்தாமரை செல்வன் சுந்தரேச குருக்கள் பகவதி ராஜ் ஆகியோர் சிறப்பாக செய்திருந்தனர்.



