நீலகிரி மாவட்டம்
கோத்தகிரி நூலகத்தில் 57 வது நூலக வார விழாவை முன்னிட்டு கோத்தகிரி பகுதி பள்ளிகள் சார்பில் கட்டுரை போட்டி மற்றும் பேச்சு, ஓவியம் வினாடி வினா போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் ஆறாம் வகுப்பு முதல் பனிரெண்டாம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகள் பங்கேற்றனர். இதில் அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் தனியார் பள்ளிகள் கலந்து கொண்டனர். நிகழ்வில் முன்னாள் மாவட்ட கல்வி அலுவலர் பெள்ளி, பேரூராட்சி மன்றத் தலைவி ஜெயக்குமாரி, கவிஞர் அகரம் சிவா,கவிஞர் விவேராஜு, ஆசிரியை நிர்மலா, ராமாலயா மணி, கவிதா, மகாலட்சுமி, ஆசிரியர் ஆனந்தன் ஆகியோர் நடுவர்களாக இருந்து போட்டிகளில் கலந்து கொண்ட மாணவ மாணவிகளை தேர்வு செய்தனர். இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை வாசகர் வட்ட தலைவர் கௌரி வரதராஜன், நூலகர் சுப்ரமணியம் மற்றும் நூலக பணியாளர்கள் சிறப்பாக செய்திருந்தனர்.