சேலம் மாவட்டம்
தமிழகத்தில் சாதி வெறியர்களால் பட்டியலின மக்கள் மீது தொடர்ந்து ஏவி விடும் வன்முறை மற்றும் எழுச்சித்தமிழர் படத்தை சேதப்படுத்தும் கும்பலை உடனடியாக குண்டர் தடுப்பு காவல் சட்டத்தில் சிறைப்படுத்திட வலியுறுத்தி சேலம் கோட்டை மைதானத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் சேலம் மாநகர மாவட்ட துணைச் செயலாளர் கி.காயத்ரி தலைமையில் தெற்கு மாவட்ட செயலாளர் வீ.ந.சுந்தர் முன்னிலையில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இதில் மேனாள் துணை பொதுச் செயலாளர் சுசி.கலையரசன், ஒழுங்கு நடவடிக்கை குழு மாநில துணைச் செயலாளர் சௌ.பாவேந்தன்,
மாநில துணைச் செயலாளர் சி.அங்கப்பன்,
ச.கிருஷ்ணமூர்த்தி,அ.மணிக்குமார் ஆகியோர் கலந்து கொண்டு கண்டன உரை ஆற்றினர்.இறுதியாக மாநகர மாவட்ட துணை அமைப்பாளர் (வடக்கு) சேலம் லெனின் நன்றியுரை ஆற்றினார்.