சேலம், ஆகஸ்ட் 03 –
சேலத்தில் ஜோய் ஆலுக்காஸ் வழங்கும் மிகவும் எதிர்பார்க்கப்படும் பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோரூமில் தொடங்கவுள்ளது. இதன் மூலம் சேலம் மாநகரம் இண்டர் நேஷ்னல் டைமண்ட் கலெக்ஷன்கள், டிசைன்களுடன் பிரகாசிக்க உள்ளது.
இந்த பிரத்தியேக கண்காட்சி, வைரம் மற்றும் பிரஸ்ஸியஸ் கற்களின் நகைகள் அடங்கிய கண்கவர் அழகும், நுணுக்கமான கைவினை திறனும் கொண்ட சிறப்பு வடிவமைப்புகளை முன்னிறுத்துகிறது. ராஜகம்பீரம் பொருந்திய திருமண நகைகள் முதல் நவீன டிசைன்கள் வரை இந்தக் காட்சியில் காணலாம். இவை அனைத்தும் இந்த நிகழ்வுக்காகவே தேர்ந்தெடுக்கப்பட்டவை.
ஜோய் ஆலுக்காஸ் குழுமத்தின் தலைவர் டாக்டர் ஜோய் ஆலுக்காஸ் இந்த சிறப்பு குறித்து கூறுகையில், “பிரில்லியன்ஸ் டைமண்ட் ஜுவல்லரி ஷோவை சேலத்திற்கு கொண்டு வருவதில் மிகுந்த மகிழ்ச்சி. இந்த நகரம் கலாச்சார சிறப்புடன் கூடிய நவீன பாணியை பின்பற்றுகிறது. அவர்களுக்காகவே அசாத்தியமான டிசைன்களில், புதிய கலெக்ஷன்களில் இந்த கண்காட்சியை வடிவமைத்துள்ளோம் இவ்வாறு அவர் தெரிவித்தார்.
மேலும் இந்த சிறப்பு நிகழ்வை ஒட்டி ₹1 லட்சம் மற்றும் அதற்கு மேற்பட்ட வைர நகை பர்ச்சேஸ்க்கு, 1 கிராம் தங்க நாணயம் இலவசமாக வழங்கப்படும். இந்த கண்காட்சி 2025 ஆகஸ்ட் 1 முதல் 17 வரை குறுகிய காலத்திற்கு மட்டுமே நடைபெறவுள்ளது. ஜோய் ஆலுக்காஸ் சேலம் ஷோரூமில் மட்டுமே அனுபவிக்கக்கூடிய இந்த அழகிய அனுபவத்தை வாடிக்கையாளர்கள் வந்து பார்வையிட்டு பயன்பெறுமாறு நிர்வாகம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.



