தஞ்சாவூர். மார்ச் 16.
தஞ்சாவூர் தமிழ் பல்கலைக்கழகத் தில் இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளி சார்பில் பேராசிரியர்கள் அகத்தியலிங் கனார், சே.வை. சண்முகனார், சிதம்பரநாதன் செட்டியார் மற்றும் செண்பகம் சுப்பையா அறக்கட்டளை சொற்பொழிவு நடைபெற்றது.
பல்கலைக்கழகத் துணைவேந்தர் பொறுப்பு குழு உறுப்பினர்கள் அமுதா, பாரத ஜோதி ஆகியோர் தலைமை வகித்தனர் .பதிவாளர் (பொ)பன்னீர்செல்வம் வாழ்த்தி னார் .சீர்காழி பொன்மனச் செம்மல் புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி தமிழ் துறை பேராசிரியர் சதீஸ் சிறப்புரையாற்றினார்
முன்னதாக மொழிப் புலத் தலைவரும், இந்திய மொழிகள் மற்றும் ஒப்பிலக்கிய பள்ளி துறை தலைவருமான கவிதா அனைவரை யும் வரவேற்றார். துறையின் இணை பேராசிரியர் வெங்கடேசன் நன்றி கூறினார்
நிகழ்ச்சியை முனைவர் பட்ட ஆய்வாளர் தர்ஷினி தொகுத்து வழங்கினார்.



