தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி 6ம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு தூத்துக்குடி மாவட்டம் கிழக்கு ஒன்றியம் சார்பாக ஒன்றிய தலைவரும் ஓட்டப்பிடாரம் ஊராட்சி ஒன்றிய துணை பெருந்தலைவரும் ஆகிய காசி விஸ்வநாதன் தலைமையில் குறுக்கு சாலை மெயின் பஜாரில் அமைக்கப்பட்டுள்ள அவரது உருவப்படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். பின்னர் வாகன ஓட்டிகள், வியாபாரிகள், பொதுமக்களுக்கு உணவுகள் வழங்கினார் . இந் நிகழ்வில் மாவட்ட மாணவர் அணி இணை அமைப்பாளர் ராதாகிருஷ்ணன்உட்பட கட்சி நிர்வாகிகள் தோழமை கட்சியின் தொண்டர்கள், பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



