நாகர்கோவில், ஜன.10-
தமிழ்நாடு அரசின் உங்கள் கனவ சொல்லுங்கள் என்ற புதிய திட்டம் இன்று திருவள்ளுர் மாவட்டத்தில் தமிழக முதல்வரால் துவக்கி வைக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து, குமரி மாவட்டம் நாகர்காவில் ஸ்காட் கிறிஸ்தவ கல்லூரி கலையரங்கில் நடைபெற்ற நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித்தலைவர் அழகுமீனா தலைமை வகித்தார்.
தொடர்ந்து அவர் பேசியதாவது: தமிழ்நாடு முதலமைச்சரின் இந்த புதிய திட்டத்தின் மூலம் மக்களிடம் பூர்த்தி செய்யப்பட்ட படிவங்களை பெற்று, அந்த விபரங்களை மொபைல்போன் செயலியில் பதிவு செய்து, ஒவ்வொரு குடும்பத்திற்கும் ஒரு எண்ணுடன் கனவு அட்டை வழங்கப்படும். இந்த அட்டை மூலம் www.uks.tn.gov.in என்ற இணையதளத்தில் தங்களது கனவு / கோரிக்கையின் நிலை குறித்து தெரிந்துக் கொள்ளலாம். வரும் 11.01.2026 ம் தேதி, இணையதளம் பயன்பாட்டுக்கு வந்துவிடும். வெளிநாடுவாழ் தமிழர்கள் இணையதளத்தில் அவர்களின் கனவை தெரிவிக்கலாம்.
இத்திட்டத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் ரேஷன் கடைகளில் உள்ள மொத்தம் ஊரக பகுதிகளில் – 205262 குடும்பங்களையும், நகர்புறங்களில் 292522 என மொத்தம் 497784 குடும்பங்களையும் இத்திட்டத்தின் கீழ் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. கணக்கெடுப்பு பணியை மேற்கொள்ள ஊரகப்பகுதிகளுக்கு 470 தன்னார்வலர்களும், நகர்ப்புறங்களுக்கு 587 தன்னார்வலர்களும் என மொத்தம் 1057 தன்னார்வலர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
ஒவ்வொரு தன்னார்வலர்களும் ஒரு நாளைக்கு 30 குடும்பங்களை கணக்கெடுப்பு மேற்கொள்ளவும், 15 முதல் 21 நாட்களுக்குள் கணக்கெடுப்பு பணியை முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. கணக்கெடுப்பு படிவத்தில் பூர்த்தி செய்யும் விவரங்களை கைப்பேசி செயலி மூலம் தரவுகள் சேகரிக்கப்பட உள்ளது. கணக்கெடுப்பு மேற்கொள்ளும் ஒவ்வொரு குடும்பங்களுக்கும் கனவு அட்டை வழங்கப்பட உள்ளது. இத்திட்டத்திற்கு முழு ஒத்துழைப்பு தர பொதுமக்களை கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு மாவட்ட ஆட்சித்தலைவர் பேசினார்.
தொடர்ந்து திட்டத்தின் கீழ் பணியாற்றவுள்ள தன்னார்வலர்களுக்கு தொப்பி, அடையாள அட்டை, கையேடு, படிவம் உள்ளிட்டவைகள் வழங்கப்பட்டது.
நிகழ்ச்சியில் தமிழ்நாடு உணவு ஆணையத்தலைவர் சுரேஷ் ராஜன், நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ், மகளிர் திட்ட திட்ட இயக்குநர் திரு.பத்ஹூ முகம்மது நசீர், நாகர்கோவில் மாநகராட்சி துணை மேயர் மேரி பிரின்சி லதா, உட்பட பலர் கலந்துகொண்டார்கள்.



