மார்த்தாண்டம், நவ. 24 –
மார்த்தாண்டம் அருகே ஞாறாம்விளை பகுதியை சேர்ந்தவர் ஸ்டாலின் (32). இவர் திக்குறிச்சி பகுதியை சேர்ந்த ஆஷா (29) என்ற பெண்ணை திருமணம் செய்து வாழ்ந்து வந்தார். ஸ்டாலின் யூனியன் வங்கி திக்கணங்கோடு கிளையில் காசாளராக பணியாற்றி வந்தார். இவர் கேரளா, திருவனந்தபுரம் கிளைக்கு பணியிட மாறுதலுக்கு விண்ணப்பித்து இருந்த நிலையில், கடந்த மாதம் தக்கலை கிளைக்கு பணியிட மாறுதல் கிடைத்து உள்ளது.
இதனால் மன அழுத்தத்தில் இருந்த ஸ்டாலின், வீட்டில் யாரும் இல்லாத நேரம் பார்த்து வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இதை பார்த்த மனைவி கதறி அழுதார். இது சம்பந்தமாக மார்த்தாண்டம் போலீசாருக்கு புகார் அளிக்கப்பட்டது. போலீசார் உடலை கைப்பற்றி குழித்துறை அரசு மருத்துவமனைகு உடல் கூறு ஆய்விற்காக அனுப்பி வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.



