மார்த்தாண்டம், டிச. 26 –
குமரி மாவட்டத்தில் திற்பரப்பு சிறந்த சுற்றுலா தளமாகும். இங்குள்ள அருவியில் வருடத்தில் அனைத்து பெரும்பாலான நாட்களில் தண்ணீர் கொட்டுவதால் எல்லா நாட்களிலும் சுற்றுலா பயணிகள் வருகை காணப்படும். குறிப்பாக விடுமுறை நாட்களில் பயணிகள் கூட்டம் மிக அதிகமாக காணப்படும். தற்போது கடந்த மூன்று மாதங்களாக பருவ மழை காரணமாக தற்போது அருவியில் தண்ணீர் எல்லா பகுதிகளிலும் பரந்து விரிந்து கொட்டுகிறது.
இதற்கிடையில் தற்போது பள்ளிகளுக்கு அரையாண்டு தேர்வு முடிந்து விடுமுறை மற்றும் கிறிஸ்மஸ், புத்தாண்டு விடுமுறை என தொடர் விடுமுறை விடப்பட்டுள்ளது. இதனால் பயணிகள் கூட்டம் அதிகரித்து வருகிறது. இதுபோன்று சபரிமலை செல்லும் ஐயப்ப பக்தர்களும் திற்பரப்பு அருவிக்கு வருகை தருகின்றனர். அறிவியல் குறிக்க ஆர்வத்துடன் வரும் பயணிகள் எண்ணிக்கையும் அதிகரித்து உள்ளது.
இன்று காலை முதல் சுற்றுலா பயணிகள் அதிக அளவில் திற்பரப்பில் குவிந்தனர். அவர்கள் அருவியில் ஆனந்த குளியலிட்டு மகிழ்ந்தனர். மேலும் திற்பரப்பு தடுப்பனையில் நடைபெறும் உல்லாச படகு சவாரியிலும் பயணிகள் ஆர்வமுடன் சென்று படகு சவாரி செய்தனர்.



