மார்த்தாண்டம், நவ. 24 –
கன்னியாகுமரி மாவட்டத்தில் வரலாற்று சிறப்புமிக்க மகாபாரத கால தொடர்புடைய பழமை வாய்ந்த உண்ணாமலகடை நாராயணபுரம் மஹாவிஷ்ணு திருக்கோயில் உள்ளது. தமிழக இந்து அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் இந்த கோவில் உள்ளது. தினசரி இரண்டு நேர பூஜைகள் நடைபெற்று வருகிறது.
நேற்று இரவு வழக்கம் போல பூஜைகள் முடிந்து நடையை அடைத்து விட்டு பூசாரி கோப குமார் என்பவர் சென்றார். இன்று காலை கோயிலுக்கு வந்த போது காணிக்கை பெட்டி உடைக்கப்பட்ட நிலையில் காணப்பட்டதை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
தொடர்ந்து இந்து அறநிலையத்துறை ஸ்ரீ காரியம் முத்தமிழ் செல்வனுக்கு தகவல் கொடுக்கவே, அவர் மார்த்தாண்டம் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து உடைக்கப்பட்ட உண்டியல் தடயங்களை கைபற்றி வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இங்கு இரண்டு வருடங்களுக்கு முன் இது போன்று திருட்டு நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. இந்த கோயிலில் இரவு பாதுகாவலர் மற்றும் கண்காணிப்பு கேமரா பொருத்த இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்காததே திருட்டு நடக்க காரணம் என்று பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் குற்றச்சாட்டு எழுப்பியுள்ளனர்.



