மார்த்தாண்டம், ஜன. 7 –
கொல்லங்கோடு அருகே இளம் பாலமுக்கு பகுதியை சேர்ந்தவர் நளினாக்க்ஷன் (41). கட்டுமான பொருட்கள் வாடகைக்கு விடும் கடை நடத்தி வந்தார். இவரது மனைவி கிருஷ்ணபிரியா. அடிக்கடி குடும்ப பிரச்சனை ஏற்படுவது வழக்கம். இந்த நிலையில் கிருஷ்ண பிரியா நேற்று கொல்லங்கோடு போலீசில் புகார் அளித்துள்ளார். போலீசார் பேச்சுவார்த்தை நடத்தி சமரசம் செய்து வீட்டுக்கு அனுப்பி வைத்தனர்.
தொடர்ந்து மீண்டும் இரவு கணவன் மனைவிக்கு பிரச்சனை ஏற்பட்டுள்ள நிலையில் இரவு 10 மணியளவில் கையை பிளேடால் அறுத்து, அறையில் ஃபேன் கொக்கியில் நனினாக்க்ஷன் தூக்கிட்டு தற்கொலை செய்தார். கொல்லங்கோடு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.



