நாகர்கோவில், டிச. 23 –
குமரி மாவட்ட வழங்கல் அலுவலரின் உத்தரவின் படி கன்னியாகுமரி மாவட்ட பறக்கும் படை தனி வட்டாட்சியர் பாரதி தலைமையில் ஓட்டுனர் ஜாண் பிரைட் உள்ளிட்ட பறக்கும் படை குழுவினர் நாகர்கோவில் சுற்று வட்டார பகுதிகளில் பொது வினியோக திட்ட கடத்தல் தடுப்பு ரோந்து பணியில் இருந்தனர். அப்போது வல்லன் குமாரவிளை பகுதியில் உள்ள வண்ணான்விளை என்ற இடத்தில் சந்தேகத்திற்கு இடமாக வாகன போக்குவரத்து இருந்தால் அப்பகுதியில் இன்று அதிகாலை சுமார் 2.30 அளவில் சோதனையிட்டனர்.
அப்போது அங்குள்ள தென்னந்தோப்புக்குள் தகர ஷீட்டால் அமைக்கப்பட்ட ஒரு ஷெட்டை ஐ சோதனை செய்ததில் அங்கு 50 கிலோ அளவுடைய 63 பாலித்தீன் சாக்கு பைகளில் 3150 கிலோ பொது வினியோக திட்ட அரிசி பாதுக்கி வைக்க பட்டிருந்தது கண்டறிய பட்டது. உடனடியாக அந்த அரிசி கைப்பற்றப்பட்டது.
அதனை தொடர்ந்து சுமார் 400 மீட்டர் தொலைவில் இருந்த மற்றொரு தோட்டத்தில் இருந்த மரக்கடையில் உள்ள ஷெட்டை சோதனை செய்ததில் அதிலும் 50 கிலோ கொள்ளளவு கொண்ட 17 பாலுத்தீன் சாக்கு பைகளில் 850 கிலோ பொது வினியோக திட்ட அரிசி பதுக்கி வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
மொத்தம் 4000 கிலோ உடைய 80 அரிசி மூட்டைகளும் முழுவதுமாக கைப்பற்றப்பட்டு கோணம் நுகர் பொருள் வாணிபகழக கிட்டங்கியில் ஒப்படைக்கப்பட்டது. விசாரணையில் அரிசி மூட்டைகள் அனைத்தும் கோரள மாநிலத்திற்க்கு கடத்தி சென்று கூடுதல் விலைக்கு விற்று லாபம் ஈட்டும் நோக்கில் பதுங்கி வைக்க பட்டதாக தெரிய வருகிறது. மேலும் சம்பவம் தொடர்பாக குற்றவாளிகள் மீது வழக்கு பதிவு செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.



