நாகர்கோவில், ஜன. 24 –
நாகர்கோவில் நாகராஜா கோவில் தை திருவிழா இன்று 24ஆம் தேதி காலை கொடியேற்றத்துடன் துவங்கியது. காலை 7.30 மணிக்கு கொடியேற்றம் தொடங்கியது. பின்னர் தீபாராதனை காட்டப்பட்டது. இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் சட்டமன்ற உறுப்பினர் எம் ஆர் காந்தி, மாநகராட்சி மேயர் மகேஷ், வள்ளலார் பேரவை மாநில தலைவர் சுவாமி பத்மேந்திரா மற்றும் கோயில் பக்தர்கள் சங்கத்தினர் உட்பட பலர் கலந்து கொண்டனர். வரும் 2ம் தேதி வரை 10 நாட்கள் இந்த திருவிழா நடக்கிறது.
திருவிழாவை ஒட்டி தினமும் சிறப்பு அபிஷேக பூஜை, சிறப்பு வழிபாடு, இரவு கலை நிகழ்ச்சிகள், இரவு 8:30 மணிக்கு சுவாமி பல்வேறு வாகனங்களில் சுவாமி எழுந்தருளல் நடக்கிறது.
9ம் நாள் திருவிழா வருகிற பிப்ரவரி 1ம் தேதி நடக்கிறது. அன்று காலை 8:30 மணிக்கு திருத்தேர் வடம் தொட்டு இழுக்கும் நிகழ்ச்சி நடக்கிறது. இதில் கலெக்டர் அழகு மீனா, எஸ்.பி ஸ்டாலின், அமைச்சர் மனோதங்கராஜ், மேயர் மகேஷ், உணவு ஆணைய தலைவர் சுரேஷ் ராஜன், விஜய் வசந்த் எம்பி உள்ளிட்ட பலர் பங்கேற்கின்றனர்.
தொடர்ந்து பொழுதுபோக்கு அம்சங்களுடன் கூடிய நிகழ்ச்சிகள், இரவு 10மணிக்கு சப்த வர்ணம் நடக்கிறது. 10ம் நாள் திருவிழாவான பிப்ரவரி 2ம் தேதி காலை 4:15 மணிக்கு சிறப்பு அபிஷேகம், சிறப்பு வழிபாடு நடக்கிறது. தொடர்ந்து மாலை 5:30 மணிக்கு ஆராட்டு, இரவு 7:15 மணிக்கு ஒழுகினசேரி ஆராட்டு துறையிலிருந்து சுவாமி வெள்ளி நாகராஜா வாகனத்தில் எழுந்தருளல், 7:45 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து கொம்மண்டை அம்மன் சுவாமி கோயிலுக்கு எழுந்தருளல், இரவு 10 மணிக்கு ஆராட்டுத்துறையில் இருந்து சுவாமி கோயிலுக்கு எழுந்தருளல் நடக்கிறது.



