ஈரோடு, டிச. 5 –
நாடார் மகாஜன சங்க கொங்கு மண்டல செயலாளர் பொன்னுசாமி, புறநகர் மாவட்ட செயலாளர் வரதராஜன், ஈரோடு மாநகர் மாவட்ட செயலாளர் சின்னத்தம்பி, திருப்பூர் மாநகர மாவட்ட செயலாளர் இளங்கோ, ஈரோடு வடக்கு மாவட்ட தலைவர் கருப்பண்ணன், தெற்கு மாவட்ட தலைவர் காமராஜ், ஈரோடு மாநகர மாவட்ட தலைவர் மகுடபதி ஆகியோர் ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சுஜாதாவிடம் ஒரு மனுகொடுத்துள்ளனர்.
அதில் கூறியிருப்பதாவது: முன்னாள் முதலமைச்சர் காமராஜர் மற்றும் நாடார் சமூகத்தை அவமதிக்கும் வகையில் யூடிப் சேனலில் எந்தவித ஆதாரமும் இல்லாமல் பொய்யான குற்றச்சாட்டுகளை குற்றம் என்று தெரிந்தே முக்தர் அகமத் என்பவர் பரப்பி வருகிறார். முன்னாள் முதல்வர் காமராஜர் மற்றும் நாடார்களின் நன் மதிப்பை கெடுக்கும் விதமாக அவதூறு கருத்துகளை உள்நோக்கத்துடன் செயல்படுபவர் மீது சட்டப்படி வழக்கு பதிவு செய்து நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.



