தியாகி இமானுவேல் சேகரனாரின் 100 வது பிறந்தநாள் விழா மற்றும் அரசு விழாவை முன்னிட்டு போகலூர் மேற்கு ஒன்றியம் மஞ்சூர் தேவேந்திரர் நகரில் நடைபெற்ற குருபூஜை விழாவில் போகலூர் மேற்கு ஒன்றிய கழக செயலாளர் வழக்கறிஞர் குணசேகரன் கலந்துகொண்டு புகழ் அஞ்சலி செலுத்தினார்கள். உடன் போகலூர் ஒன்றிய பெருந்தலைவர் சத்யா குணசேகரன், பொதுக்குழு உறுப்பினர் ஒன்றிய துணைப் பெருந்தலைவர் வழக்கறிஞர் பூமிநாதன், மாவட்டக் கழகப் பிரதிநிதி அரியகுடி புத்தூர் ஊராட்சி மன்ற தலைவர் கார்த்திக் பாண்டியன்,டி கருங்குளம் ஊராட்சி மன்ற தலைவர் சிவசுப்பிரமணியன்,ஒன்றிய அயலக அணி அமைப்பாளர் வேலுச்சாமி, முன்னாள் ராணுவ வீரர் சரவணன், வழக்கறிஞர் அணி பரமசிவம், தெய்வேந்திரநல்லூர் கிளைக் கழக செயலாளர் ராஜேஷ் கண்ணன், தகவல் தொழில் நுட்ப அணி அமைப்பாளர் சண்முகசுந்தரம், ஒன்றிய மாணவரணி செயலாளர் அரியகுடி திருமுருகன், மஞ்சூர் இளைஞர் அணியினர் மற்றும் தாய்மார்கள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



