பிப்:9
ஈரோடு தேசிய நெடுஞ்சாலை பல்லகவுண்டம்பாளையம் அருகில் நடந்த பேரூந்து விபத்தில் படுகாயம் அடைந்து கோவை கங்கா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருபவர்களை
திருப்பூர் வடக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர்
கே .என்.விஜயகுமார் எம்எல்ஏ சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். அங்கு சிகிச்சை பெற்று வரும் தொட்டிபாளையம் பகுதி பொருளாளர் திரு அவினாசியப்பன் அவர்களின் பேத்தி செல்வி காமினி, போயம்பாளையம் கங்கா நகர் பகுதியை சேர்ந்த ஸ்ரீதர் அவர்களின் மனைவி மோனிகா, பத்மாவதிபுரம் பகுதியைச் சேர்ந்த அரசகுமார் அவர்களின் மகன் சுபித்குமார் ஆகியோரை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார். உடன் முன்னாள் திருப்பூர் மாமன்ற உறுப்பினர்கள் வானவில் கனகராஜ் விஜயகுமார் ரங்கசாமி ஆகியோர் இருந்தனர்..