கிருஷ்ணகிரி மே 22: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் பர்கூர் கிருஷ்ணகிரி ஊத்தங்கரை சூளகிரி தேன்கனிக்கோட்டை அஞ்செட்டி ஆகிய ஆறு வட்டங்களில் 1434 ஆம் ஆண்டுக்கான வருவாய் தீர்வாயம் (ஜமாபந்தி) கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியரின் உத்தரவின் பேரில் நடைபெற்றது. 3வது நாளாக பருகூர் வட்டாட்சியர் அலுவலகத்தில் வட்டாட்சியர் சின்னசாமி தலைமையில் நடைபெற்ற இந்த ஜமாபந்தி நிகழ்ச்சியில் மாவட்ட தனித்துறை கலெக்டர் தனஞ்செயன் கலந்துகொண்டு பொதுமக்களிடம் மனுக்களை பெற்றார். முகாமில் தனி வட்டாட்சியர் ரமேஷ், தலைமையிட துணை தாசில்தார் பாஷா, மண்டல துணை வட்டாட்சியர் சீனிவாசன், வட்ட வழங்கல் அலுவலர் செந்தில், வருவாய் ஆய்வாளர்கள் குமரேசன், ரதி, மின்சாரத்துறை உதவி பொறியாளர் சுரேஷ், வேளாண்மை துறை, வனத்துறை உள்ளிட்ட அலுவலர்கள், கிராம நிர்வாக அலுவலர்கள், ஏராளமானோர் கலந்து கொண்டனர். மேலும் பர்கூர், குட்டூர், மஜித்கொள்ளஹள்ளி, ஐகொத்தப்பள்ளி, உள்ளிட்ட ஆறு ஊராட்சிக்குட்பட்ட பொதுமக்கள் கலந்துகொண்டு தங்களது கோரிக்கை மனுவினை வழங்கினார்கள். மேலும் வருகின்ற வியாழன், வெள்ளி, மற்றும் 27ம் தேதி புதன்கிழமை இறுதி நாளாக இந்த ஜமாபந்தி நிகழ்ச்சி நடைபெறும் எனவும், பொதுமக்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கிடுமாறும், மேலும் இங்கு வழங்கப்படும் கோரிக்கை மனுக்களுக்கு உடனடியாக தீர்வு காணப்படும் என மாவட்ட தனித்துறை கலெக்டர் தனஞ்செயன் தெரிவித்தார்.
பர்கூரில் ஜமாபந்தி- ஏராளமான பொதுமக்கள் ஜமாபந்தியில் கலந்து கொண்டு தங்களது கோரிக்கை மனுக்களை வழங்கினர்

You Might Also Like
Leave a comment
Weekly Newsletter
Subscribe to our newsletter to get our newest articles instantly!
Popular News
- Advertisement -



Global Coronavirus Cases
Confirmed
0
Death
0
More Information:Covid-19 Statistics