தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அவர்களின் உத்தரவின்படி தூத்துக்குடி மாநகராட்சிக்குட்பட்ட சண்முகபுரம் பகுதியில் நடைபெற்று வரும் புதிய குடிநீர் குழாய் அமைக்கும் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார் மாநகராட்சி மேயர் ஜெகன் பெரியசாமி. உடன் பகுதி கழக செயலாளரும் மாமன்ற உறுப்பினருமான சுரேஷ்குமார் , வட்ட கழக செயலாளர் பொன்ராஜ் , முன்னாள் மாமன்ற உறுப்பினரும் முன்னாள் வட்ட கழக செயலாளருமான ஜெயசிங் , தலைமை கழக பேச்சாளர் இருதயராஜ் , நேர்முக உதவியாளர்ஜேஸ்பர் ஞான மார்டீன் மாநகராட்சி அதிகாரிகள் மற்றும் துறை சார்ந்த அலுவலர்கள்.



